கடன் தள்ளுபடி... வங்கி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
அறிக்கையொன்று வெளியிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த செய்தி இருக்கலாம் என, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த தவறான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை வங்கி நிர்வாகம் மீண்டும் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.