உயர்தர பரீட்சையின் புதிய திகதி தொடர்பான அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
புதிய திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில் கூறினார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
