கண் பரிசோதனை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

மார்ச் 6, 2024 - 17:43
கண் பரிசோதனை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கண் பரிசோதனை

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், உலகளவில் க்ளூகோமாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!