மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 9 இந்திய மீனவர்கள் மீட்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் மீட்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்திய மீனவர்கள் பயணித்த இழுவைப்படகுடன், கரையோரமாக கடலில் மூழ்கும் நிலையில் காணப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
குறித்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்திய மீனவர்கள் ஒன்பது பேரையும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.