பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

டிசம்பர் 6, 2023 - 14:07
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!

வெளிநாடு செல்வதாகக் கூறி, விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் இலங்கையிலேயே வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

பல்கலைக்கழக வாரியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் - 80, பேராதனையில் - 41, ஜயவர்தனபுர - 35, களனி - 54, திறந்த பல்கலைக்கழகத்தில் - 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் - 81 என 80 பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக எம்.பி சுட்டிக்காட்டினார். 

ஏழு வருடங்களுக்கு விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90 சதவீதமானோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக அவர் குற்றஞ்சாட்டினார். 

2020-2023ஆம் ஆண்டு  காலப்பகுதியில் வெளிநாடு செல்வதாகக் கூறி விடுமுறை எடுத்தவர்களில் 7 பேரே வெளிநாடுகளில் உள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!