கடைசி நேர ட்விஸ்ட்... ஜோவிகா எஸ்கேப்.. அப்போ டைட்டில் வின்னர் அவுட்டா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அழுது அடம்பிடித்து சீன் போட்ட ஜோவிகா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் அவருக்கு குறைவான ஆதரவையே அளித்திருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் ஜோவிகா இருந்து வந்தார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக இந்த வாரமும் ஜோவிகா காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் இன்னொரு போட்டியாளர் தான் வெளியேறுவார் என்றே தகவல்கள் கசிந்து உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சின் ஆரம்பத்தில் இருந்தே சில நெட்டிசன்கள் பிக் பாஸ் ரசிகர்கள் என்கிற பெயரில் உள்ளிருக்கும் ரகசிய தகவல்களை யார் முதலில் சொல்வது என போட்டிப் போட்டு லீக் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் யார் எவிக்ட் ஆக உள்ளார் என்பதை ஷூட்டிங் முடிவதற்கு முன்னாடியே போட்டு உடைத்து விட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அழுது அடம்பிடித்து சீன் போட்ட ஜோவிகா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் அவருக்கு குறைவான ஆதரவையே அளித்திருந்தனர்.
இதையும் படிங்க: பிடித்த உணவுக்காக 3.2 கோடி ரூபாய் செலவு செய்த சீன பெண்
ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஜோவிகா இந்த வாரம் எவிக்ட் ஆக மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக இன்னொரு போட்டியாளர் தான் எவிக்ட் ஆகப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
டைட்டில் வின்னர் நான் தான் என இந்த சீசனில் சுற்றிக் கொண்டு திரிந்த சரவண விக்ரம் தான் நாளை நடைபெற உள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கில் வெளியேறப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
விக்ரமின் அத்தனை கனவிலும் இப்படி மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களே என ரசிகர்கள் வருத்தப்படுவது போல கலாய்த்து வருகின்றனர். புல்லியிங் கேங்கின் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவதாகவும், அதில் இருந்த வாயில்லா பூச்சிகளை தான் வெளியே அனுப்புவதாகவும் கூறுகின்றனர்.
மாயா, பூர்ணிமா, ஜோவிகாவை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு பின்னணியில் சில சதி வேலைகள் நடப்பதாகவும் ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |