நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை
அரபிக் கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் வாழ் மக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (30) காலை 6.00 மணியளவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரபிக் கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் கி.மீ. (40-50) வரை பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.