இன்று பிற்பகல்  1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை

மேல் மாகாணம் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மே 9, 2025 - 10:51
இன்று பிற்பகல்  1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (09) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!