நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28-04-2026) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு மத்தியில் விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கையை பொதுமக்கள் உடனடியாக அறிந்துகொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலேயே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ.-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்கவும், உலோகக் கம்பிகள் மற்றும் மரங்களின் அருகில் நிற்பதைத் தவிர்க்கவும், மின்சார சாதனங்களை அவசரமின்றி இயக்காமல் இருப்பதும் நல்லது.
