அதி உச்சத்துக்கு செல்லும் வெப்பம்... நாளைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 8, 2024 - 22:59
அதி உச்சத்துக்கு செல்லும் வெப்பம்... நாளைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நாளை (09) வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. .

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!