குழு மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலி - கரந்தெனிய பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.