சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அந்தந்த பாடசாலையின் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகள் தொடர்பில் கேள்விகள் இருப்பின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 452,979 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர், அவர்களில் 387,648 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்றும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 65,331 பேர் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.