வெறும் 19 பந்தில் கிரிக்கெட் போட்டியை முடித்த இங்கிலாந்து... புதிய சாதனை!

இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வென்று டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஜுன் 14, 2024 - 10:23
வெறும் 19 பந்தில் கிரிக்கெட் போட்டியை முடித்த இங்கிலாந்து... புதிய சாதனை!

இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வென்று டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 28ஆவது போட்டியாக இங்கிலாந்து அணியும், ஓமான் அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. 

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. 

அந்த அளவிற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது ஓமான் அணி. இதன் மூலம் 13.2 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது ஓமான் அணி. 

இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், அடல் ரஷீத் 4 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் இருந்து எல்லா பந்துகளையும் பவுண்டரிகள் அடிக்க முயற்சித்தனர். ஜோஸ் பட்லர் 8 பந்துக்கு 24 ரன்கள் நடித்திருந்தார்.

வெறும் 3.1 ஓவர்களில் அதாவது வெறும் 19 பந்துகளிலேயே 2 விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்  போட்டியில் வெற்றி பெற்றனர். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு, இந்த போட்டியை பயன்படுத்தி புள்ளிபட்டியலில் ரன் ரேட்டை உயர்த்தியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணி அடுத்த போட்டியில் தோல்வி பெற்றால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

அத்துடன், இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில்,  வெறும் 20 பந்துகளுக்குள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!