ஆப்கானிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்திலும், அட்சரேகை 37.10 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 71.12 டிகிரி கிழக்கு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று(22) அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு நிகழ்வு இலங்கை நேரப்படி அதிகாலை 6:30 மணிக்கு பதிவு செய்யப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்திலும், அட்சரேகை 37.10 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 71.12 டிகிரி கிழக்கு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றம் பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. சம்பவத்தின் பாதிப்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.