வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொடங்கொட வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (15) அதிகாலை, வீட்டின் ஜன்னல் மீது 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.