தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. 

செப்டெம்பர் 8, 2024 - 11:01
தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. 

இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருவதுடன், அங்கு மாணவர் விடுதியும் உள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த 5ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டதுடன், 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனால், சிகிச்சை பலனின்றி மேலும் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!