சென்னை அணியில் இருந்து விலகும் முக்கியமான வீரர்? இக்கட்டான நிலை!

சென்னை அணி வீரர் தீபக் சாஹர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

May 5, 2024 - 13:02
May 6, 2024 - 19:22
சென்னை அணியில் இருந்து விலகும் முக்கியமான வீரர்? இக்கட்டான நிலை!

ஐபில் தொடரில் இதுவரை 52 போட்டிகள் முடிந்துள்ளநிலையில், சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடம் 5 வது இடத்தில் உள்ளது.

சென்னை அணிக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலே சென்னை அணி அடுத்த சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும். 

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள போட்டியில் சென்னை அணி மீண்டும் பஞ்சாப் அணியுடன் விளையாட உள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியுடன் தோல்வியை தழுவியத்திற்கு சென்னை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் காயம் காரணமாக விளையாடாமல் போனதும் ஒரு காரணம். 

இந்நிலையில் சென்னை அணி வீரர் தீபக் சாஹர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமாகாத நிலையில், அவருக்கு காயம் தீவிரமாகிவருவதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாஹர் அணியில் இருந்து விலகுவது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.