சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு?

ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

மார்ச் 8, 2025 - 12:17
மார்ச் 8, 2025 - 12:18
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு?

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. 

போட்டி நடைபெறும் நாளில் அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் ஒருவேளை இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?.

போட்டி நடைபெறும் நாளன்று மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும். 

ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!