ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலியும் வழக்கம் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.