அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

கொழும்பு, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில், களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மே 17, 2025 - 15:47
அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

கொழும்பு, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில், களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை மீட்கப்பட்டதாக முல்லேரியா பொலிஸார் கூறினர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும், அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!