புதிய பாப்பரசர் தெரிவு; இன்றும் இரகசிய வாக்கெடுப்பு
புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், இரகசிய வாக்கெடுப்பு இன்றும் (08) இடம்பெறவுள்ளது.

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், இரகசிய வாக்கெடுப்பு இன்றும் (08) இடம்பெறவுள்ளது.
பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானதுடன், உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆராதனையைத் தொடர்ந்து கர்தினால்கள் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறும் அறைக்குள் சென்றதுடன், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் கர்தினால்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த நிலையில், வத்திக்கான் நேரப்படி நேற்றிரவு (07) 9.00 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியானது.
முதல் சுற்று இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படாமையை அறிவிக்க இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகின்றது.