மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.

மே 3, 2025 - 00:52
மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.
 
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, ஏனைய அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் கூறியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!