களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்
களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் களனி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமைகள் குறைந்து வருவதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
தவிர, களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நாகலம் வீதியில் உள்ள நீர் அளவீட்டின் நீர்மட்டம், இன்று (02) அதிகாலை 02 மணிக்கு 8 அடியாக இருந்ததுடன், அதிகாலை 03 மணிக்கு 7.9 அடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அங்கு பெரும் வெள்ள நிலைமை தொடர்ந்து நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.