பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி புயல்; உயிரிழப்பு 90-ஐ கடந்தது; செபு மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 5, 2025 - 15:58
பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி புயல்; உயிரிழப்பு 90-ஐ கடந்தது; செபு மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட செபு (Cebu) மாகாணத்தில் புயலின் பேரழிவு தாக்கம் குறைந்த பின்னர், இந்த பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, கல்மேகி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 90-ஐ கடந்து உயர்ந்துள்ளது. செபு மாகாணத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.

செபு சிட்டியின் மெட்ரோ பகுதியில் உள்ள லிலோவன் (Liloan) வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 35 உடல்கள் மீட்கப்பட்டதாக செபு செய்தித் தொடர்பாளர் ரோன் ராமோஸ் (Rhon Ramos) AFPயிடம் தெரிவித்தார்.

தேசிய சிவில் பாதுகாப்பு துணை நிர்வாகி ரஃபேலிடோ அலெஜான்ட்ரோ (Rafaelito Alejandro), மற்ற மாகாணங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். மேலும், 26 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

வெள்ள நீர் நகரங்கள் மற்றும் மாநகரங்கள் வழியாக விரைந்து வந்துள்ளது. இந்த வெள்ளத்தால் கார்கள், லொரிகள் மற்றும் மிகப் பெரிய சரக்குப் பெட்டகங்கள் கூட அடித்துச் செல்லப்பட்டன. 

அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதிகளே (highly urbanised areas) வெள்ளத்தால் தாக்கப்பட்டதாக அலெஜான்ட்ரோ கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!