67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள்; வெளியான தகவல்

உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள்; வெளியான தகவல்

கொழும்பு, கொம்பனி வீதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவன் மற்றும் மாணவி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர