கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது

கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்களை ஹங்வெல்ல பொலிஸார் நேற்று (09) கைது செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்களை ஹங்வெல்ல பொலிஸார் நேற்று (09) கைது செய்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய ஒருவர் வரகாபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் 24 வயதுடைய தொலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணைகளின் போது, ​​இந்தக் குற்றத்திற்கு உதவிய மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதுடைய நபர் ஹேவடுன்ன பிரதேசத்தை சேர்ந்தவர். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -