கனடாவில் ஆறு பேர் படுகொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்
கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஃபெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவரே கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நேற்று (14ஆம் திகதி) விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.