லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம்
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக, 2026ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படவுள்ள கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் பிற்பகல் 12 மணியளவில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர