தலதா மாளிகைக்குள் ‘ப்ரீ ஷூட்’ - விசாரணை ஆரம்பம்
மாளிகைக்குள் உள்ள மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுத்துள்ளமை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குள் அண்மையில் திருமணமான தம்பதியொன்று படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாளிகைக்குள் உள்ள மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுத்துள்ளமை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல, சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் உறுதிப்படுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலைஞருடன் தம்பதியினர் இன்று (09) கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -