சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக, சாதாரண தரப் பரீட்சைகளும் பிற்போடப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சைகளும் ஒன்றரை மாத கால அளவில் பிற்போடப்படலாம் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அடுத்த வாரம் உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
