கெஹெலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு திகதி நிர்ணயம்
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஇந்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஇந்த வழக்கு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர் ஆகியோர் சமர்ப்பித்த வழக்கு விவரங்களை நீதிமன்றம் மதிப்பாய்வு செய்தது.
இதைத் தொடர்ந்து, விசாரணையை ஏப்ரல் 27 ஆம் திகதி தொடங்க நீதிபதி உத்தரவிட்டார், மேலும் சாட்சிகள் அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணையம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றிய போது, 2020 ஆகஸ்ட் 13 முதல் 2024 ஜூன் 24 வரையான காலப்பகுதியில் சட்ட விரோதமாக சொத்துக்களைப் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் அடங்குவர்.