இளம் பெண் கொலை: அகதிக்கு குறைந்தபட்சம் 29 ஆண்டு சிறைத் தண்டனை

2024 அக்டோபர் 20 அன்று இரவு, பணியை முடித்துவிட்டு ரயில் நிலையத்துக்குச் சென்ற ரியானன் வைட்டை மஜெக் பின்தொடர்ந்து, பெஸ்காட் ஸ்டேடியம் ரயில் நிலையம் பகுதியில் தாக்குதல் நடத்தினார். 
இளம் பெண் கொலை: அகதிக்கு குறைந்தபட்சம் 29 ஆண்டு சிறைத் தண்டனை

இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் நடந்த கொலை வழக்கில், ஒரு அகதி நபருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூடானைச் சேர்ந்த டெங் மஜெக் என்பவர், தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரிந்த ரியானன் வைட் என்ற இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

2024 அக்டோபர் 20 அன்று இரவு, பணியை முடித்துவிட்டு ரயில் நிலையத்துக்குச் சென்ற ரியானன் வைட்டை மஜெக் பின்தொடர்ந்து, பெஸ்காட் ஸ்டேடியம் ரயில் நிலையம் பகுதியில் தாக்குதல் நடத்தினார். 

கடுமையாக காயமடைந்த ரியானன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கான தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த வழக்கு விசாரணை கோவென்ட்ரி கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றம் மஜெக்கிற்கு குறைந்தபட்சமாக 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய வாழ்நாள் தண்டனையை அறிவித்தது.

தண்டனை அறிவிக்கப்பட்டபோது, உயிரிழந்த ரியானனின் தாயார் டோனா வைட் தனது வேதனையை நீதிமன்றத்தில் பகிர்ந்துகொண்டார். மகளை இழந்த துயரம் தன்னை வாழ்நாள் முழுவதும் வாட்டும் என அவர் தெரிவித்தார்.

“என் வாழ்க்கையும் அந்த நாளோடு ஒரு அளவுக்கு முடிந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

ரியானனின் சகோதரி அலெக்ஸ் வைட், தன்னுடைய மறைந்த சகோதரியின் மகனை தற்போது தானே வளர்த்து வருவதாகவும், தாயை இழந்த உண்மையை அவனுக்கு விளக்குவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் கூறினார். அந்த குழந்தை எதிர்காலத்தில் மருத்துவராகி, மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கனவைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர