பதுளை வீதியில் பஸ் புரண்டதில் 27 பேர் காயம்

இதன்போது, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

மே 29, 2024 - 14:43
பதுளை வீதியில் பஸ் புரண்டதில் 27 பேர் காயம்

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதன்போது, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதி, எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி மீது மோதமல் தவிர்க்க முயற்சித்துள்ளார்.

அப்போது, ​​வீதியில் இருந்த மண் திட்டுடன் மோதி, பஸ் சில அடிகள் கீழே வீதியில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த நால்வர் உள்ளிட்ட காயமடைந்த 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!