தொலைபேசி தொடர்பான தகராறு: தந்தையின் தாக்குதலில் 14 வயது சிறுமி உயிரிழப்பு

கடுமையாக காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொலைபேசி தொடர்பான தகராறு: தந்தையின் தாக்குதலில் 14 வயது சிறுமி உயிரிழப்பு
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு துயரமான முடிவை எட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், தந்தை தனது 14 வயது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில், சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடுமையாக காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT