கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு 01 தொடக்கம் 04 மற்றும் 07 தொடக்கம் 15 வரையான பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.

Colombo (News21) மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர்பம்பி நிலையங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் கட்டமைப்பில் அத்தியாவசிய திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) மு.ப. 8 மணி தொடக்கம் பி.ப. 10 மணிவரை 14 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01 தொடக்கம் 04 மற்றும் 07 தொடக்கம் 15 வரையான பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.