பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜுலை 24, 2024 - 10:37
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமலில் இருக்கும்.

தென்மேற்கு பருவமழை செயலில் இருப்பதால், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது.

மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மறு அறிவிப்பு வரும் வரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!