வாகன இறக்குமதிக்கு ஓகஸ்ட் அனுமதி! தனியாருக்கு எப்போது?
ஆரம்ப கட்டமாக வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டமாக வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் எப்படி படிப்படியாக நீக்கப்படும் என்பது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடுஆகஸ்ட் மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.