சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 13 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 115,043 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 367,804 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி பெப்ரவரி மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
