இன்றும் கனமழை - வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 24, 2023 - 12:54
இன்றும் கனமழை - வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

இன்று (24ஆம் திகதி) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!