மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை - இன்று வெளியான தகவல்!
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது மீணடும் அதிகரித்து வருகின்றது.

உலக சந்தையின் மாற்றங்களுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது மீணடும் அதிகரித்து வருகின்றது.
இன்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாயாகவும், 24 கரட் தங்க கிராம் 26,750 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாயாகவும், 22 கரட் தங்க கிராம் 24,530 ரூபாவாகவும் பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 196,200 ரூபாயாக காணப்படுகின்றது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,410 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,250 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 186,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.