பாடசாலைக்குள் புகுந்த இளம்பெண் சரமாரி துப்பாக்கிச்சூடு... 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 28, 2023 - 11:02
பாடசாலைக்குள் புகுந்த இளம்பெண் சரமாரி துப்பாக்கிச்சூடு... 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் இயங்கி வரும் பள்ளியில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் நுழைந்த இளம்பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த 3 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

தொடர்ந்து அந்தப் பள்ளியின் காவலாளி உள்பட மேலும் மூவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இந்நிலையில் பள்ளியைச் சுற்றி வளைத்த பொலிஸார் நடத்திய பதிலடித் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் கொல்லப்பட்டார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!