கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 25, 2023 - 13:07
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு இன்று (25) அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை - கோட்டை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதற்கான திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!