முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
இலங்கை அமைச்சரவை, முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீடுகளுக்காக சில பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது, அமைச்சரவை பேச்சாளர் இதனைக் கூறினார்.

