பண்டிகை காலத்தில் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கெனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.