அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலைக்கும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறும் சம்பள அதிகரிப்பு தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 20,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு அவசியம் என தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலைக்கும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறும் சம்பள அதிகரிப்பு தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக இதன்போது அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.