இலங்கையில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு... வெளியான தகவல்!
முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் இவ்வாறு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக நிதி அமைச்சு வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நலன் பெறும் 10 இலட்சம் பேருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பள உயர்வு சில கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.