எல்.பி.எல் இறுதிப் போட்டியை கண்டுகளித்த ஜனாதிபதி 

ஆகஸ்ட் 21, 2023 - 15:45
எல்.பி.எல் இறுதிப் போட்டியை கண்டுகளித்த ஜனாதிபதி 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர்  லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார்.

இறுதிப் போட்டியை பார்வையிட வருகைதந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு  பிரமுகர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். 

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,  தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஆகியோரும் போட்டியை  கண்டுகளித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!