அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் (22) முடிவடைகிறது.

மார்ச் 22, 2024 - 13:55
மார்ச் 22, 2024 - 13:56
அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் (22) முடிவடைகிறது.

இணையவழி முறையில் இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக ஏனையவர்கள் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவதாக கூறப்படுகின்றது.

மேலும், அடையாள அட்டை இல்லாமை உள்ளிட்டபிரச்சனைகளால் இதுவரை 300,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!