நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (02) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜுன் 2, 2024 - 12:12
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (02) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளைகளில் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!