இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் இதோ - வெளியான தகவல்
வடமேற்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவை மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும்.
வடமேற்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவை மழை பெய்யும்.
பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோமீற்றர் வரை காற்று வீசும்.
ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.